வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினரின் சோதனைச் சாவடி!!

375

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் நேற்று (01.05) மாலை பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தான வீதியில் இச் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் குறிப்பிட்ட சில சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் இலக்கங்கள் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 31 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கடந்த வாரத்தில் நடைபெற்ற சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் 24 பேர் கைது செய்யப்பட்டும் நான்கு வாள்கள் கைப்பற்றப்பட்டுமுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.