வவுனியா கோவிற்குளத்தில் இராணுவத்தினரின் ஆடை மற்றும் உயர் மின்வழு கொண்ட வயருடன் ஒருவர் கைது!!

632

வவுனியா கோவிற்குளம் எட்டாம் ஒழுங்கையில் இன்று (02.05.2019) இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு சோதனையுடன் போது இராணுவத்தினரின் ஆடை மற்றும் உயர் மின்வழு கொண்ட வயர் என்பவற்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

நாட்டின் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து வவுனியா முழுவதும் திடீர் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக இன்று வவுனியா கோவிற்குளத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கோவிற்குளம் எட்டாம் ஒழுங்கையில் அமைந்து ஓர் வீட்டினை இராணுவத்தினர் சோதனைக்குட்படுத்தினார்கள்.

இதன் போது அவரது வீட்டிலிருந்து 450- 750 வலு கொண்ட நான்கு மின்சார வயர் மற்றும் இராணுவத்தினரின் உடை, கையுறை, சப்பாத்து, டிஜிட்டல் மீற்றர் போன்றவற்றை கைப்பற்றிய இராணுவத்தினர் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன் போது இப் பொருட்களை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தாகவும் அந்த நாட்டில் இம் மின்சார வயரே உபயோகத்தில் உள்ளதாக கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.