வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்!!

464

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகாக் அஹலம் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இவருக்கு பட்டானிச்சூர் பகுதியில் வைத்து சில மாதங்களுக்கு முன் அசிட் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இன்று பள்ளிக்கு தொழுகைக்காக செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்த போதே வீட்டிற்கு சென்ற இருவர் இவரை அழைத்துள்ளனர். அவர்களை நேக்கி இவர் சென்றபோதே கூரிய ஆயுதத்தால் கழுத்துப்பகுதியில் வெட்டியுள்ளனர்.

உடனடியாக வைத்தியசாலைக்கு காயமடைந்தவரை கொண்டு சென்றபோதிலும் அவர் இறந்துள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.