வவுனியா தோணிக்கல் இளைஞர்களால் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

1248

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மக்களுக்கு வவுனியா, தோணிக்கல் இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

உதவும் இதயங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா, தோணிக்கல் ஐயா சனசமூக நிலையத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இளைஞர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி குண்டுத் தாக்குதலில் மரணித்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் சுகம்பெற வேண்டியும் மௌனப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.