வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

539

வவுனியா பரநாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர்புளியங்குளம் கிராமத்தில் 29.04.2019 அன்று மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.ஹனீபா தலைமையில் இன்று (03.05) நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மினி சோறாவளியால் 26 குடும்பங்களை சேர்ந்த 94 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 26 வீடுகள் சேதமடைந்திருந்தது.

பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களுக்கு இன்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்ப்பாட்டில் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தறப்பாள், நுளம்புவலை, பாய் மற்றும் போர்வைகளை ‘கியுமெடிக்கா ரிலீப்’ என்ற நிறுவனம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளை வவுனியா அனர்த்த மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ரி.சூரியராஜா, நிவாரணங்களை வழங்கிய அரசார்பற்ற நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பார்வையிட்டு அம்மக்களுக்கான மலசல கூடங்கள், மற்றும் குடிநீர் தேவைகள் உள்ள வீடுகளையும் பார்வையிட்டிருந்தனர்.