திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை!!

288

திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் இளைஞன் ஒருவர் அம்மாவின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பரசுராமன் 5- வது தெருவைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா (55). இவரது மகன் மன்சூர் (25). இவர் மாடன் லைன் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மன்சூருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். வரும் ஆகஸ்ட் மாதம் இவருக்கு திருமணம் நடக்கவிருந்தது.
இந்நிலையில் இவர் நேற்று திடீரென்று தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலில், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மன்சூர், பணம் இருந்தால் தான் மனிதனுக்கு மதிப்பு, இல்லாவிட்டால் பிணம் என்று விரக்தியில் பேசியுள்ளார். ஏதோ கவலையில் பேசுகிறார் என நண்பர்கள் சாதாரணமாக இருந்துள்ளனர்.

அதன் பின் வீட்டிற்கு வந்த அவர் தனியாக அறையில் படுத்து உறங்கியுள்ளார். அதன் பின் மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால், பெற்றோர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, தாயின் சேலையில் தூக்கிட்ட நிலையில் மன்சூர் பிணமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியாத நிலையில் அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் நண்பர்களின் வாட்ஸ் அப்பில் ஷேர் ஆனது. அதில் அவர் எழுதியிருந்த வாசகத்தைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது வாட்ஸ் அப்பில், என்ன வாழ்க்கைடா இது. காசு இல்லைன்னா யாரும் நம்மல மதிக்கமாட்டாங்க இந்த வாழ்க்கைக்கு குட் பை… டியர் ஆல் லவ் யூ ஸோ மச் என்ற வாசகங்கள் இருந்தன. இதைப் பார்த்த நண்பர்கள் துயரமடைந்துள்ளனர்.

வாழ்க்கைக்குப் பணம் தேவைதான். ஆனால் பணத்தை வைத்து மட்டும் வாழ்வதல்ல வாழ்க்கை என்பதைப் புரியாமல் மன்சூர் வாழ்க்கையை முடித்துக்கொண்டாரே என அவரது உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.