பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார்.. மாமியாரை இளம் திருநங்கையுடன் சேர்ந்து கொன்ற மருமகள்!!

252

இந்தியாவில் மாமியாரை, திருநங்கை உதவியுடன் கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பீனா சர்மா (62). இவரின் மருமகள் பிரியங்கா.

பீனா வீட்டுக்கு பின்பக்கத்தில் சுனிதா என்ற இளம் திருநங்கை குடியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீனா தனது படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது சுனிதாவுடன் அங்கு வந்தார் பிரியங்கா. பின்னர் பிரியங்கா தனது மாமியார் பீனாவின் கால்களை கெட்டியாக பிடித்து கொண்ட நிலையில் சுனிதா அவர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தார்.

பின்னர் பீரோவில் இருந்த நகைகளை பிரியங்கா எடுத்து கொண்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். இதையடுத்து காலையில் பீனா சடலமாக இருப்பதை பார்த்த பிரியங்காவின் கணவரும், பீனாவின் மகனுமான விஷாந்த் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விசாரித்தனர். அப்போது பிரியங்கா மணிக்கட்டில் அணிந்திருந்த நகையின் ஒரு பகுதி பீனா சடலம் அருகில் இருந்ததை கண்டுபிடித்த பொலிசார் பிரியங்காவிடம் விசாரித்தனர்.

அப்போது மாமியார் பீனாவை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், பீனா என்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதோடு, என் பெற்றோர் வீட்டுக்கு செல்ல கடந்த 3 ஆண்டுகளாக அனுமதிக்கவில்லை.

இதோடு கடந்த சில வருடங்களில் பல முறை என்னை கருக்கலைப்பு செய்ய வைத்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது, இதையடுத்தே சுனிதா உதவியுடன் பீனாவை கொலை செய்தேன் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து கொலையாளி இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.