வவுனியாவில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று(04.05) இடம்பெற்றது.
வவுனியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஓர் பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும் பாடசாலை சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு தொடர்பான போன்ற பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் உள்ள 180 பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.





