வவுனியா வளாகத்தின் கல்விசெயற்பாடுகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!!

720

யாழ் பல்கலைழக வவுனியா வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கபடும் என்று வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த அவர்,

நாட்டின் தென்பகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியா வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தபட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் வாரம் வளாகத்தின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய வியாபாரகற்கைகள் பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கள் கிழமை 6 ஆம் திகதி ஆரம்பிக்கபடவுள்ளதுடன், பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்விசெயற்பாடுகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை 7 ஆம் திகதி ஆரம்பிக்கபடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் விடுதிகளில் தங்கிநிற்கின்ற வியாபாரகற்கைகள் பீடத்தின் மாணவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள்ளும், பிரயோக விஞ்ஞான பீடத்தின் மாணவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணிவரைக்கும் விடுதிகளிற்குள் அனுமதிக்கபடுவர்.

அத்துடன் மாணவர்கள் எடுத்துவரும் பொதிகளும் பாதுகாப்பு பிரிவினரால் சோதனைக்குள்ளாக்கபடும் என்று தெரிவித்தார்.