அன்று மணவாழ்க்கையில் இணைந்து…. இன்று மரணத்திலும் இணைந்த தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

247

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவரும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்காட்டை சேர்ந்த் ஆறுமுகம் – மல்லிகா தம்பதியினரின் இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மெத்தை தலையணை தயாரித்து விற்று வருகிறார் ஆறுமுகம். நேற்றிரவு ஈரோட்டில் உள்ள மகள் வீட்டிற்கு ஆறுமுகம், மல்லிகா மோட்டார் பைக்கில் புறப்பட்டனர்.

இரவு 8 மணிக்கு பள்ளிபாளையம் வந்தபோது மல்லிகா சர்க்கரை நோயால் மயக்கமடைந்தார். உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆறுமுகம் அழைத்து சென்றதில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கணவர், துயரம் தாங்காமல் சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். திருமணம் ஆன நாள் முதல் தம்பதியினர் மனமொத்து குடும்பம் நடத்தி வந்தனர். சாவிலும் இணைபிரியாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை ஆறுமுகம் முடித்து கொண்டது நெகிழ வைக்கிறது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.