20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தமிழர் இலங்கையில் பிச்சை எடுத்த சோகம் : புகைப்படத்தால் தெரியவந்த உண்மை!!

255

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தமிழகத்தை சேர்ந்த நபர் இலங்கையில் பிச்சை எடுத்து வந்த நிலையில் சமூகவலைதளத்தின் உதவியுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடம் என்ற பகுதியை சேர்ந்த பரதன் என்பவர் 3 பேருடன் சேர்ந்து 1996 ஆம் ஆண்டு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

நீண்ட நாட்களாகியும் இவர்கள் கரை திரும்பாத காரணத்தால் மாயமானவர்கள் பட்டியலில் இவர்களது பெயரை சேர்த்தது மீன்வளத்துறை.

இந்நிலையில்தான் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவர் கைது என்றும் அந்த பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிச்சை எடுத்து வருபவர்களின் புகைப்படத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சமூகவலைதள பக்கம் ஒன்றில் வெளியானது.

இந்த செய்தியை பார்த்த ராமேஷ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர், அதில் பரதனின் புகைப்படத்தை பார்த்து அது பரதன் தான் என்பதை உறுதி செய்து அதுகுறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, உயிருடன் மனநிலை பாதிக்கப்பட்டு கொழும்பு பகுதியில் சுற்றித் திரியும் பரதனை மீட்டு வர வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு பரதனின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பரதனனின் மகளிடம் இருந்து அவர் குறித்த தகவல்கள் மற்றும் கடிதத்தினை மீன்வளத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.