சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : காதலனை திருமணம் செய்த குடும்பத்தையே கொன்று வீசிய தாய்!!

418

சண்டிகர் மாநிலத்தில் பூஜா என்ற பெண்மணி தனது காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக குடும்பத்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூஜா என்ற பெண்மணி தனது இரண்டு மகள்களான ரேகா, சீமா ஆகிய இருவரையும் தனது காதலன் உதவியோடு கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளார்.

சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பூஜாவின் கணவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இறந்துபோனது தெரியவந்துள்ளது.

தனது காதலன் அஜய்யை திருமணம் செய்துகொள்வதற்கு கணவர் மற்றும் இரண்டு மகள்கள் இடையூறாக இருப்பதால் கோபம் கொண்ட பூஜா, தனது குடும்பத்தையே கொலை செய்ய தனது காதலனுடன் சேர்ந்து திட்டம் போட்டு அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

தனது கணவரை கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு 3 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அதன்படியே, கூலிப்படையினர் கொலை செய்து வீசியுள்ளனர்.கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டதையடுத்தே பூஜா தனது மகள்களை கொலை செய்த உண்மையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அஜய் தலைமறைவாகியுள்ள நிலையில் பூஜா கைது செய்யப்பட்டுள்ளார். தனது காதலுக்காக கட்டிய கணவன் உட்பட, இரண்டு மகள்களையும் கொலை செய்த தாயின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.