வவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் சுற்றிவளைப்பில் மூவர் கைது!!

1046

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (08.05) மதியம் 12.30 மணியளவில் நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குளத்தில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தலுக்காக தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான தங்கூசி வலைகளை வைத்திருந்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுடனும், மடுகந்தை விஷேட அதிரடிபடையின் பொறுப்பதிகாரி இன்ஸ் பெக்டர் அமுனுபுர நெறிப்படுத்தலில் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபர்களை 16.05 அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.