13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை, மகன் : தாயிடம் கதறிய சோகம்!!

636

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடூரத்தில் ஈடுப்பட்ட 75 வயதான வெங்கடாசலம் மற்றும் 45 வயதான அவரது மகன் குண்டுமணி ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்த பொலிசார் அளித்த தகவலில், மளிகை கடை நடத்திவரும் வெங்கடாசலம் மற்றும் குண்டுமணி, பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கும் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அடிக்கடி சகஜமாக குழந்தையுடன் விளையாடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அடிக்கடி குழந்தை தனது வயிற்று பகுதியில் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் தாய் தொடர்ந்து என்ன நடந்தது என கேட்க குழந்தை இறுதியாக நடந்த கொடுமையை பகிர்ந்துள்ளது.

நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என குற்றவாளிகள் குழந்தையை மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் பொலிசில் புகார் அளிக்க குற்றவாளி இருவரையும் பொலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.