இந்தி படங்களில் நடிக்க மாட்டேன் : கார்த்தி!!

312

Karthiகார்த்தி இந்தி படங்களில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாயின. சூர்யா ரத்த சரித்திரம் மூலம் இந்தியில் அறிமுகமானார். மீண்டும் இந்திப் படமொன்றில் நடிக்கப் போகிறார். தனுசும் ராஞ்சனா படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது கார்த்திக்கும் இந்திப்பட வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்பட்டது.

கார்த்தி நடித்த பிரியாணி படம் சில தினங்களில் ரிலீசாக உள்ளது. அதன் பிறகு இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இதுகுறித்து கார்த்தியிடம் கேட்டபோது மறுத்தார்.

மணிரத்னம் படங்களில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்தபோதே இயக்குனர் அனுராக் காஷ்யப்பை எனக்கு தெரியும். அவர் ஓரிரு இந்திப் படங்களில் நடிக்க என்னிடம் கேட்டார். நான் ஏற்கவில்லை. எனக்கு இந்தி தெரியாது. அங்குள்ள கலாசாரமும் தெரியாது. எனவே இந்திப் படங்களில் உடனடியாக நடிக்கும் திட்டம் இல்லை. எனக்கு தமிழில் போதுமான படங்கள் உள்ளன என்றார்.