மனைவி செய்த துரோகத்தை கண்கூடாக பார்த்த கணவன் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

406

இந்தியாவில் மனைவி செய்த துரோகத்தை கண்கூடாக பார்த்த கணவன், மனைவி உட்பட இருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சாகர் சஹு (35). இவருக்கும் தேவி (30) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தேவிக்கு கணேஷ் (20) என்ற இளைஞருடன் சில காலமாக பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சாகர் மனைவியை கண்டித்த நிலையில் இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தில் புகார் செய்தார்.

பஞ்சாயத்தில் தேவி, கணேஷுடன் இனி பழகக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து தேவி சில காலமாக கணேஷூடன் பழகுவதை நிறுத்தினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாகர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்.

அப்போது தேவி கணேஷூடன் இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த சாகர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார், பின்னர் மரக்கட்டையால் கணேஷை அடித்து கொன்றார்.

இதையடுத்து வீட்டின் கதவை பூட்டிய சாகர் காவல் நிலையத்துக்கு சென்று அனைத்தையும் கூறி சரணடைந்தார்.

பின்னர் சாகரை கைது செய்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து இரு சடலங்களையும் கைப்பற்றினார்கள். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.