இந்தியாவில் இரண்டரை வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலால் பிரியங்கா காந்தி தனி விமானம் அனுப்பி உதவியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டரவை வயது சிறுமி புற்றுநோய் காரணமாக அங்கிருக்கும் பிரயாக்ராஜ் Kamla Nehru மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அந்த சிறுமியின் நிலைமை இன்னும் மோசமானதால், அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ்சுக்லா, உத்திரப்பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம் தெரிவிக்க, அவர் உடனடியாக அந்த சிறுமியின் சிகிச்சைக்காக டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதற்காக அவர் தனிவிமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார், அதிலா சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் சென்றுள்ளனர்.