ஒரே சமயத்தில் உயிரிழந்த இரண்டு இளம்பெண்கள் : அவர்களின் சடலங்களை பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

265

இந்தியாவில் இரண்டு இளம்பெண்கள் வெவ்வேறு காரணங்களில் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் தவறுதலாக மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நஷ்ரின் பானு. இவர் உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே போல ஜாதவ் என்ற இளம்பெண்ணை இளைஞர் ஒருதலையாக காதலித்த நிலையில் காதலை அவர் ஏற்கவில்லை.

இதையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர் ஜாதவை கத்தியால் குத்தினார். பின்னர் பானு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே ஜாதவுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் பானு மற்றும் ஜாதவின் சடலங்கள் ஒரே பிணவறையில் வைக்கப்பட்டது. பின்னர் பானுவின் உடல் ஜாதவ் குடும்பத்தாரிடமும், ஜாதவின் உடல் பானு குடும்பத்தாரிடமும் தவறுதலாக மாற்றி கொடுக்கப்பட்டது.

இதையடுத்து தங்கள் வீட்டு பெண்ணான ஜாதவின் உடல் என நினைத்து பானுவின் உடலை ஜாதவ் குடும்பத்தார் சுடுகாட்டில் புதைத்தனர்.

பின்னர் பானுவின் உடலுக்கு பதிலாக வேறு பெண்ணின் உடல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அறிந்த பானு குடும்பத்தார் அதிர்ச்சியடைந்து இது குறித்து வெளியில் கூறிய நிலையிலேயே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து பானு குடும்பத்தார் மற்றும் ஜாதவ் குடும்பத்தார் தனியார் மருத்துவமனைக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். இதன்பின்னர் புதைக்கப்பட்ட பானுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதே போல ஜாதவ் உடலும் அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் சிலரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு இது தொடர்பாக விசாரித்து வருகிறது.

பானுவின் கணவர் சயித் கூறுகையில், சடலம் மாறுவதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழியர்களின் செயலால் பாதிக்கப்பட்டது நாங்கள் தான் என கூறியுள்ளார்.

ஜாதரின் உறவினர் மீனா கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.