திருமணம் முடிந்த சில மாதங்களிலே கணவனை கல்லால் அடித்து கொலை செய்த மனைவி!!

465

கல்லால் அடித்து கொலை

தமிழகத்தில் திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆன நிலையில், மனைவி கணவரை கல்லாலேயே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலைசங்ககோட்டையை சேர்ந்தவர் சதீஷ் குமார். இவர் அப்பராசபுதூரை சேர்ந்த கலைமதி என்பவரை காதலித்து வந்து அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

அதன் படி இருவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்த போதிலும், இருவருக்கும் இடையே திருமணம் ஆன சில வாரங்களிலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சில நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான கலைமதி அவருடைய கணவர் சதீஷ்குமாரை அருகில் இருந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளார்.

பின்னர் கலைமதி உடன் வந்த அவருடைய பெற்றோரான நாகராஜன், மருமகனை கத்தியால் குத்தி உள்ளார். இதில் சதீஷ்குமார் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, விரைந்து வந்த பொலிசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.