மன்னார் – வாஸ்நகர் பகுதியில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு 11.10 அளவில் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடம் இருந்து ஒரு கிலோ 140 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.




