பெண் மீது அங்கசேட்டை

வவுனியா தர்மலிங்கம் வீதியில் நேற்று இரவு கணவனுடன் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மீது அங்கசேட்டை செய்த இளைஞனை கணவனின் உதவியுடன் பொலிசாரிடம் பிடித்துக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு வவுனியா, தர்மலிங்கம் வீதியில் கணவனுடன் நடந்து சென்ற குடும்பப்பெண் மீது அப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் அங்கச் சேட்டை மேற்கொண்டுள்ளார். கணவனுடன் சென்ற பெண் நடந்தவற்றை கணவனுக்குத் தெரியப்படுத்தி குறித்த இளைஞனையும் அடையாளம் காட்டியுள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசாரைக் கண்டதும் இளைஞன் தப்பிக்க முயற்சித்துள்ளார். பொலிசார் இளைஞனை மடக்கிப்பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றிணையத் தொடங்கியுள்ளதையடுத்து நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞனை தொடர்ந்தும் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




