இந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமியின் மனைவி மரணம்!!

329

Narayanaswamyஇந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி புதுடெல்லியில் மரணமடைந்தார். கடந்த மே மாதம் வான் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கலைச்செல்வி படுகாயம் அடைந்தார்.

குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கலைச்செல்விக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரது தலையில் தையல்களும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கலைச்செல்வியின் தலையில் போடப்பட்ட தையலில் இருந்து இரத்தம் வந்தது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் சேர்ந்த அன்று இரவே அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

நாராயணசாமி கலைச்செல்வி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமி இலங்கை விவகாரங்களில் அவ்வப்போது குரல்கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.