கணவனை இரவில் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மனைவி… அதன் பின்னர் நடந்த சம்பவம்!!

431

சென்னையில் 8 பேர் மீது குடிபோதையில் இருந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் கன்னியப்பன் என்பவர் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார்.

இவர், வெள்ளிப்பட்டறையில் வேலை பார்க்கிறார். இவரின் மனைவி ரஞ்சனி. ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கர். இவர், பெயின்டராக வேலை பார்க்கிறார். இந்த வீட்டின் இரண்டாம் மாடியில் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி, எஸ். வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு 8 பேரும் வீட்டு மொட்டை மாடியில் மது அருந்து கொண்டிருந்த போது அங்கு குடிபோதையில் கன்னியப்பனும், பாஸ்கரும் வந்தார்கள். இருவரும் அந்த எட்டு பேருடன் வாக்குவாதம் செய்த நிலையில் பின்னர் சண்டையாக மாறியது.

இதை பார்த்த ரஞ்சினி கன்னியப்பனையும் பாஸ்கரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். வீட்டின் வெளியில் 8 பேரும் உருட்டுகட்டையுடன் வந்து தகராறு செய்தனர்.

பின்னர் வீட்டை திறந்து கொண்டு வெளியில் வந்த கன்னியப்பன், வெள்ளிப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து 8 பேர் மீதும் வீசிய நிலையில் அவர்கள் வலியால் அலறித்துடித்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கன்னியப்பனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.