வவுனியாவில் பசுமாடு திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது!!

892

வவுனியாவில் பசுமாடு திருட்டுபோயுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வவுனியா, மூன்று முறிப்பு பகுதியிலுள்ள பட்டியிலிருந்து பசுமாடு ஒன்று திருட்டுப்போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பசு மாட்டை கடந்த இரு தினங்களாக எங்கு தேடியும் காணாத நிலையில் அடையாளந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தததோடு, தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.