
வவுனியாவில் பயணம் செய்த இளைஞன் ஒருவரை நேற்று மாலை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பம்பைமடு, புளிதறித்த புளியங்குளம் பகுதியில் வீதியில் சென்ற இளைஞனிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது உடமையிலிருந்து 80 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் 28வயதுடைய இளைஞனைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பூவரசங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.




