வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய வாகனம் : ஒருவர் பலி!!

1209

வவுனியா நெடுங்கேணியில் நேற்று (25.05) இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றையவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியொன்றும் பட்டா ரக வாகனமும் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் முற்சக்கர வண்டி சாரதியான நெடுங்கேணியை சேர்ந்த குமார் என்ற நபர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாகவும் தவம் எனப்படும் வெளிநாட்டவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணையை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.