வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி காயம்!!

608

வவுனியா கந்தசுவாமி ஆலய வீதியில் இன்று (26.05.2019) காலை 9.30 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர பகுதியில் இருந்து சூசைப்பிள்ளையார்குளம் நோக்கி கந்தசுவாமி கோவில் வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தரித்து நிற்கும் (1990) நோயாளர் காவு வண்டியிற்கு அழைப்பை ஏற்படுத்தி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.