வவுனியாவில் கிராம மக்களை அச்சுறுத்தியவர் துப்பாக்கியுடன் கைது!!

622

வவுனியா – நெளுக்குளம், சாம்பல்தோட்டம் சந்திப்பகுதியில் நேற்று மதுபோதையில் கிராம மக்களை அச்சுறுத்திய நபர் ஒருவரை இடியன் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சாம்பல்தோட்டம் டிஸ்கோ சந்தியை சேர்ந்த 33வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது நபர் ஒருவர் மதுபோதையில் கிராம மகக்களை அச்சுறுத்தி வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனையடுத்து, குறித்த நபர் வீட்டிற்குச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளார் துரத்திச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணிகளிலிருந்த்து அவர் இடியன் துப்பாக்கி ஒன்றினை தன்வசம் வைத்திருப்பதாக பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.