தாய்க்கு உணவளிக்க பிச்சை எடுக்கும் 6 வயது சிறுமி : கண்கலங்க வைக்கும் வீடியோ!!

415

கண்கலங்க வைக்கும் வீடியோ

இந்தியாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்க்கு உணவளிக்க 6 வயது சிறுமி பிச்சை எடுத்த சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கோப்பால் பகுதியை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (6). இவரின் தாய் மதுவுக்கு அடிமையான நிலையில் அதன் காரணமாக நோய் வாய்ப்பட்டார்.

இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தன் தாய்க்கு தேவையான நேரத்தில் உணவளிக்க பாக்யஸ்ரீயிடம் கையில் காசு இல்லாத சூழல் நிலவியது.

இதனால் பிச்சை எடுக்க ஆரம்பித்தார் பாக்யஸ்ரீ. அந்த காசு மூலம் உணவு வாங்கி அதனை தாய்க்கு ஊட்டினார். இந்த சம்பவம் காண்போர் அனைவரையும் கண்கலங்கச் செய்தது. இந்த விடயம் வெளியே தெரிய வர பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் இருவரையும் சந்தித்து பேசியதோடு அவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.