காதலிக்காக திருடினேன் : ஆசையால் வந்த வினை : வசமாக சிக்கிய காதலன்!!

295

வசமாக சிக்கிய காதலன்

இந்தியாவில் காதலி கோபித்து கொண்டதால், அவரை சமாதானப்படுத்துவதற்காக காதலன் செயல் செயல் கடைசியில் அவரை பொலிசில் சிக்க வைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் நிர்வாகியாக இருக்கும் பெரோஸ் ஆலம் என்பவரின் காதலி எம்.பி.ஏ பயின்று வந்துள்ளார்.

அவர் பெரோசிடம் அலிகார் பல்கலைக்கழக எம்.பி.ஏ கேள்வித்தாள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவரும் சரி என்று கூறி முதலில் பழைய வினாத்தாள்களை அனுப்பியுள்ளார்.
இதைக் கண்டுபிடித்த அவரின் காதலி கோபித்துக் கொண்டு அவரிடம் பேசாமல் இருந்துள்ளார்.

இதனால், தன் காதலியைச் சாமதானப்படுத்தும் முனைப்பில் அந்தக் கேள்வித்தாளைப் பெற முயற்சி செய்திருக்கிறார் பெரோஸ். இதற்கு அவர், தன் நண்பர் ஹைதருடன் இணைந்து அலிகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர் இர்ஷாத் என்பவரின் உதவியை நாடியுள்ளார்.

கேள்வித்தாளை எடுத்துத் தந்தால், அந்தப் பல்கலைக்கழகத்தில் இர்ஷாத்-தை பணி நிரந்தரம் செய்வதாகவும் அவர்கள் வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர்.

அதன் படி கேள்வித்தாளை பெற்ற அவர்கள் முதலில் பெரோஸின் காதலிக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின் இதை அப்படியே விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்ற ஆசையில், அந்த வினாத்தாளை ஜெராக்ஸ் எடுத்து வினாத்தாள் ஒன்று 2,000 ரூபாய் வீதம் விற்றுள்ளனர்.

இதற்காக வாட்ஸ் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் பிரத்யேகமாக பேசி வந்துள்ளனர். இறுதியில் இந்த விவகாரம் பொலிசாருக்கு எப்படியோ தெரியவர, இதையடுத்து, அந்தக் கேள்வித்தாளைப் பெற்ற அவர்கள், ஃபெரோஸின் காதலிக்குக் கொடுத்திருக்கிறார்கள். பெரோஸ், ஹைதர் மற்றும் இர்ஷாத் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அலிகார் பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம், கேள்வித்தாளை வெளிவிட்டதை ஒப்புக்கொண்ட பெரோஸிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.