சென்னையில் மனைவியை விட்டு சொந்த ஊருக்கு சென்ற கணவன்.. பின்னர் நடந்த சம்பவம்!!

340

தாயுடன் சேர்ந்து தற்கொலை

சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் என்ஜினீயர் ஒருவர் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்தவர் சிற்றரசு (75), இவருடைய மனைவி ராஜலட்சுமி (70). இந்த தம்பதியின் மகன் அருள்வேல் (36). இவருக்கும் திவ்யா (30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு பிரணவ் (3) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் அருள்வேல் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள், கடனை திருப்பி கேட்டு அருள்வேலுக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.

இதனால் சென்னையில் வேலை செய்து வந்த அருள்வேல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வேலையை விட்டு விட்டு, பண்ருட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். திவ்யா தனது மகனுடன் சென்னையிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பண்ருட்டிக்கும் வந்து கடனை திருப்பி கேட்டு அருள்வேலை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அருள்வேல் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தனது தாய் ராஜலட்சுமியிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு ராஜலட்சுமி, நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். பின்னர் இருவரும் விஷம் குடித்த நிலையில் உயிரிழந்தனர்.

இதற்கிடையே வீட்டுக்கு திரும்பி வந்த சிற்றரசு, மனைவியும் மகனும் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.