மகளுடன் வாழ அனுமதிக்க வேண்டும் : கனடாவுக்கு இலங்கையர் உருக்கமான வேண்டுகோள்!!

217

இலங்கையர் உருக்கமான வேண்டுகோள்

அமெரிக்காவால் தேடப்படும் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததனால் சிக்கலுக்குள்ளான நபர்களில் ஒருவரின் மகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ள நிலையில், தனது மகளுடன் இணைந்து வாழ தனக்கு வாய்ப்பளிக்குமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.

முக்கிய ஆவணங்களை லீக் செய்த Edward Snowden என்பவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஹாங்காங்கில் அகதிகளாக இருந்த இலங்கையர்களை இலங்கைக்கே திரும்ப அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படி அனுப்பப்பட்டால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அடைக்கலம் கோரி கனடாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த சிலரில் Supun Thilina Kellapatha குடும்பத்தினரும் அடங்குவர்.

அவர்களுடன் இருந்த Kellapathaவின் முன்னாள் காதலியான Vanessa Rodelம், அவருக்கும் Kellapathaவுக்கும் பிறந்த Keanaவுக்கும், கனடா அடைக்கலம் கொடுக்க அவர்கள் இப்போது கனடாவில் இருக்கிறார்கள். மாண்ட்ரியலில் இருக்கும் தனது மகள் Keana, தன்னையும் அவளது மற்ற சகோதரிகளையும் தேடுவதாகவும், எப்போதும் அவர்கள் எப்போது வருவார்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் Kellapatha. தங்கள் மேல் முறையீடுகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு, கடைசி முயற்சியாக நீதிமன்ற மறுசீராய்வுக்காக விண்ணப்பித்துள்ளார் Kellapatha.

ஆனால் சமீபத்தில், மறுசீராய்வுக்காக விண்ணப்பத்திருந்தாலும் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் கடினமான நடைமுறைகளை அறிமுகம் செய்ய ஹாங்காங் புலம்பெயர்தல் துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் அச்சத்துடன் வாழ்ந்து வரும் Kellapatha, தனது பிள்ளைகளும் பள்ளியிலும், வீட்டின் அருகிலும் உள்ள மற்றவர்களால் மோசமாக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருக்கும் தனது மகளுடன் தனது மற்ற மகள்களும் தாங்களும் இணைந்து வாழ துடிப்பதாக Kellapatha தெரிவிக்க, மொண்ட்ரியலில் இருக்கும் Rodel, கனடா அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது குறித்து முடிவெடுக்க ஏன் இவ்வளவு தாமதிக்கிறது என்பதைக் குறித்து குழம்பிப்போயுள்ளார்.

Kellapatha குடும்பத்தினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும், Keana அவளது தந்தையை இழக்க நேரிடலாம் என்றும் அஞ்சுவதாக தெரிவிக்கிறார் Rodel.