வவுனியா ஒமந்தையில் கார் மரத்துடன் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

1171

கார் மரத்துடன் மோதி விபத்து

வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (30.05.2019) மதியம் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் ஒமந்தை ஏ9 வீதியில் (பொலிஸ் நிலையத்திற்கு அருகே) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.