வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் மரணம்!!

1020

கோர விபத்து

வவுனியா ஒமந்தை ஏ9 வீதியில் இன்று (30.05.2019) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் ஒமந்தை பொலிஸ் நிலையத்தினை அண்மித்த பகுதியில் (ஏ9 வீதியில்) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன்  வவுனியா கோவிற்குளத்தினை சேர்ந்த  ஓய்வு பெற்ற ஆசிரியையான 82 வயதுடைய வையாபுரிநாதன் திலகவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.