வவுனியாவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல்!!

609

கலந்துரையாடல்

வவுனியா பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று (30.05) காலை 9 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

நல்லிணக்கம் தொடர்பான பிரதேச சர்வமதக் குழுவிற்கும், கிராம அலுவலகர்கள், சிவில் பாதுகாப்புக்குழு, சமூகப்பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொலிசார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடல் பிற்பகல் வரையும் இடம்பெற்றது.

மக்களுக்கிடையே இன வன்முறைகளை ஏற்படுத்தாத வகையில் தொடர்ந்தும் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இக்கலந்தரையாடல் இடம்பெற்றிருந்தது.