வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதி வாகனத்துடன் கைது!!

705

சாரதி வாகனத்துடன் கைது

வவுனியா மரக்காரம்பளை வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் சென்ற சொகுசு வானம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனச்சாரதி தப்பிச் சென்ற நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் வாகனசச்சாரதியை வாகனத்துடன் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா மரக்காரம்பளை வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளிளை பின்னால் சென்ற கே.டி.எச் சொகுசு வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலிருந்தவர்களின் உதவியுடன் படுகாமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவ் வீதிகளுக்கு அண்மையில் இருந்த சி.சி.ரி காணொளி மூலம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் நேற்றைய தினம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மரக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 44வயதுடைய நபர் அனுராதபுரம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.