வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் பட்டானிச்சூர் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு!!

500

பட்டானிச்சூர் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள முஹிய்யித்தீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று (02.06.2019) மாலை இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மதத் தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி தலமையில் ஆரம்பமான இவ் இப்தார் நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்கள் மற்றும் வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், வர்த்தகர்கள், கடற்படையினர், பொலிசார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உரையாற்றிய மாமடு விகாராதிபதி முவட்டகம ஆனந்த தேரர் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகள் வவுனியா பூந்தோட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.