பரிதாபமாக இறந்து போன இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டாரா? கடைசியாக வந்த தொலைபேசி அழைப்பால் சிக்கிய இரண்டு பேர்!!

791


இசையமைப்பாளர் கொலை



கடந்த அக்டோபர் மாதம் 25 ம் தேதி கேரளாவை அதிர வைத்த சம்பவம் பிரபல இசையமைப்பாளர் பால பாஸ்கர் சாலையில் ஏற்பட்ட விபத்தால் பரிதாபமாக இறந்து போனது தான். சம்பவ நாள் அன்று அவருடன் அவர் மனைவி, குழந்தை தேஜஸ்வினி ஆகியோர் திருச்சூர் வடக்கு நாதர் ஆலயத்திற்கு காரில் சென்று வந்த போது இந்த விபத்து நடந்தது.



இதில் அவரின் மனைவி மற்றும் தீவிர சிகிச்சைக்கு பின் பிழைத்துக்கொண்டார். மாதங்கள் பல கடந்துவிட்ட நிலையில் தற்போது விபத்து வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் கடத்தலில் சிக்கிய பிரகாஷன் தம்பி, விஷ்ணு என இருவர் கைது செய்யப்பட்டார்கள்.




அவர்களை விசாரித்த போது பிரகாஷன் தான் பால பாஸ்கரிடம் மேனேஜராக பணியாற்றினேன் என கூறியுள்ளார். இந்த விசயம் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாஸ்கரின் மனைவி பிரகாஷன் மேனேஜர் எல்லாம் கிடையாது. ஒரு நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதற்கான சம்பளமும் அவருக்கு கொடுக்கப்பட்டது.


இறந்து போன என் கணவரை தேவையில்லாமல் கடத்தல் வழக்கில் பேசுவது மிகவும் மன வேதனையாக இருக்கிறது என கூறியுள்ளார். ஆனால் பாஸ்கரின் அப்பா பாஸ்கர் விபத்தில் இறந்ததாக தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தது அந்த இருவரும் தான். பிரகாஷனுக்கும் பாஸ்கர் இறந்த மருத்துமனைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பாஸ்கர் இறந்த பிறகு அவர்கள் யாரும் வீட்டு பக்கம் வரவே இல்லை.

விஷ்ணுவுக்கு பாஸ்கரின் தொழில், பண ரகசியங்கள் எல்லாம் தெரியும். ஆனால் நடப்பதை பார்த்தால் அந்த இருவரும் பணத்திற்காக என் மகன் கொலை செய்துவிட்டார்களா என சந்தேகம் எழுகிறது என கூறியுள்ளார். ஆனால் விபத்திற்கு முன் கடைசியாக பால பாஸ்கர் பிரகாஷனிடம் தான் போனில் பேசியுள்ளார் என சொல்லப்படுவதால் சந்தேகம் வலுத்துள்ளது.