வவுனியாவில் ரத்தினதேரருக்கு ஆதரவாக இருவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

577

உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

வவுனியா கண்டி வீதி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனிநபர் ஒருவர் இன்று (03.06) காலை முதல் சாகும்வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரையான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் ரத்தினதேரருக்கு ஆதரவான போராட்டத்தினை இன்று காலை 9மணிமுதல் கண்டி வீதி பிரதான வீதியிலுள்ள ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த தேவராசா கோபாலகிருஷ்னண் (42வயது) என்பவர் ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை தனிநபர் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்குள் அவருக்கு ஆதரவாக இன்னுமொருவரான த.சண்முகம் (வயது 49) உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்தவரும் இப்போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளார்.