வவுனியாவிலிருந்து புதூர் நோக்கி விசேட பேரூந்து சேவை!!

652

விசேட பேரூந்து சேவை

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விஷேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (03.06.2019) காலை முதல் நாளை 04.06.2019 காலை வரை இந்த விஷேட பஸ் சேவை நடைபெறவுள்ளது.

கடந்த வருடங்களில் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி வருகை தந்திருந்த போதிலும் நாட்டில் நிலவும் சீரற்ற நிலமை காரணமாக தற்போது பக்தர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதினை காணக்கூடியதாகவுள்ளது.