சர்ச்சை கருத்துக்களால் சிக்கலில் மாட்டிய நடிகை சமந்தா!!

282

Samanthaசர்ச்சை கருத்துக்களால் நடிகை சமந்தா சிக்கலில் மாட்டியுள்ளார். ஆந்திராவில் இருந்து வெளியேறும்படி மகேஷ்பாபு ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். டுவிட்டரில் சமந்தா வெளியிடும் கருத்துக்கள் சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றன. ஏற்கனவே டெல்லி சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் நல்ல தொடக்கம் என்று கூறியது காங்கிரசாரை கொதிப்படைய செய்தது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக கருத்தாக அது கருதப்பட்டது. தற்போது மகேஷ்பாபு பட போஸ்டரை விமர்சித்து எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். மகேஷ்பாபு நடித்த ஒன் மீ நினோக்டின் தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கான போஸ்டர்கள் ஐதராபாத்தில் ஒட்டப்பட்டு இருந்தன.

மகேஷ்பாபு காலடி பின்னால் நடிகை நாய் போல் தரையில் ஊர்ந்து போவது போல் அந்த போஸ்டர் இருந்தது. பெண்களை கேவலப்படுத்துவது போல் இந்த போஸ்டர் உள்ளது என்று டுவிட்டரில் சமந்தா கண்டித்தார்.

பிற்போக்கு தனமான சிந்தனை என்றும் வர்ணித்தார். இதற்க மகேஷ் பாபு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் இருந்து சமந்தாவை வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் டுவிட்டர்களில் வற்புறுத்தி வருகின்றனர். இப்பிரச்சினையில் சமந்தாவுக்கு சித்தார்த் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

கருத்து சுதந்திரம் இருப்பதற்காக தீவிரமாக பேசக் கூடாது. அப்படி கூறினால் தீவிரவாதிகள் போல் ஆகிவிடுவீர்கள். முதலில் நீங்கள்தான் வெளியேற வேண்டும் என்று மகேஷ்பாபு ரசிகர்களை கண்டித்து உள்ளார். மகேஷ்பாபு ரசிகர்களுக்கு பயந்து சமந்தாவை தெலுங்கு இயக்குனர்கள் ஓரம் கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.