உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண்!!

281

தூக்கில் தொங்கிய பெண்

கோவையில் அரசு மருத்துவமனை செவிலியர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதால், கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோவையை சேர்ந்த முரளி என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக பாண்டி மீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

பாண்டி மீனா, பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் வரதட்சணை கேட்டு முரளி கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் கூட மீனா தனது பெற்றோரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் வாங்கி முரளியிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு முரளி வீடு திரும்பியபோது, மீனா தூக்கில் தொங்கியதாகவும், காப்பாற்ற முயற்சி செய்தும் அவர் இறந்துவிட்டதாக, அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து வந்த மீனாவின் பெற்றோர், உடலில் காயம் இருப்பதாகவும், முரளி மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். பின்னர் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.