கடும் வறட்சி : தண்ணீர் டிரம்களுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கு பரிதாபம்!!

284

கடும் வறட்சி

இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவிவரும் கடும் வறட்சியின் எதிரொலியாக தண்ணீர் டிரம்களை பூட்டு போட்டு மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவிவரும் வெயில் காரணமாக அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நாட்களில் 50டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை சென்றுள்ளது. இந்நிலையில், பில்வாரா பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து வைத்துள்ள டிரம்களுக்கு பூட்டு போட்டுள்ளனர். தண்ணீர் லாரிகள் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வருவதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், தங்களுக்கு தங்கம்,

வெள்ளியை விட தண்ணீர் அதிக விலை மதிப்புள்ள பொருள் என்பதால் அதனை பத்திரமாக பூட்டி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.