சென்னையை மிரட்டும் சைக்கோ : ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொடூரம்!!

262

மிரட்டும் சைக்கோ

சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னையில் தனியார் மருத்துவமனை அருகே கடந்த 25ம் திகதி அஸ்லாம் பாஷா என்கிற நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அவருடைய ஆணுறுப்பு அறுத்து எடுக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அஸ்லாம் பாஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த நாராயணன் என்பவர் அதே இடத்தில் மதுபோதையில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அவருடைய ஆணுறுப்பை கடித்து குதற ஆரம்பித்துள்ளார்.

வலிதாங்க முடியாமல் நாராயணன் கூச்சலிட ஆரம்பித்ததும், அந்த நபர் தப்பியோட ஆரம்பித்துள்ளான். இதனையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தரிப்பது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சைக்கோ கொலைகாரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.