வெளிநாட்டில் உயிரிழந்த மகன் : அவர் இறந்தது கூட தெரியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தாய்!!

286

வெளிநாட்டில் உயிரிழந்த மகன்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் அமெரிக்காவில் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்திருப்பது அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவினாஷ் குணா (32) என்பவர் நியூ ஜெர்சியில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏரியில் குளிக்கும் போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துவிட்டதாக ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள அவர் குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்டது.

இது குறித்து பேசிய குணாவின் குடும்ப நண்பர் பிரசாத், குணா மிக சிறப்பாக நிச்சல் அடிப்பார், அவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுவதை எங்களால் நம்பமுடியவில்லை. குறித்த ஏரியில் நீரின் அளவு 7 அடிக்கு குறைவாக இருப்பதாக எண்ணி அவர் அதில் குதித்திருக்கலாம், மேலும் சேற்றில் சிக்கி குணா இறந்துள்ளார்.

குணாவின் தாய் ஜனார்தனம்மா மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகனின் இறப்பு குறித்து அவருக்கு இன்னும் தெரியாது என கூறியுள்ளார். குணா கடைசியாக அவரின் பிறந்தநாளின் போது குடும்பத்தாருடன் போனில் பேசியுள்ளார்.

அப்போது சில மாதங்களில் சொந்த ஊருக்கு வருவேன் என கூறியிருக்கிறார். இதனிடையில் குணாவின் சடலத்தை அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான வேலைகள் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.