வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய உற்சவம் இராணுவ பாதுகாப்புடன் சிறப்பாக இடம்பெறுகின்றது!!

564


பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய உற்சவம்



வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவமானது இன்றைய தினம் (07.06) மிகவும் அமைதியான முறையில் இராணுவ பாதுகாப்பு மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.



இன்று காலை (08.06) வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தூக்குக் காவடிகள், பறவைக் காவடிகள், பாற்செம்புகள், தீச்சட்டி, காவடிகள் போன்றன வவுனியா நகர வீதி வழியாக மதியம் 1 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்தது,




தொடர்ந்து ஆலயத்தில் அன்னதானம் இடம்பெற்றதுடன் இரவு பொங்கலுக்கான மடப்பண்டமெடுக்கும் கிரியைகள் இடம்பெற்று, விஷேட பூஜையுடன் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் வெளிவீதி வலம் வந்து அடியார்க்கு அருள்பாலித்து பூஜைகள் இடம்பெறவுள்ளது.