முஸ்ஸிம் பாடசாலைகளில் சோதனை

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் இன்று (09.06.2019) தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாம் தவணைக்காக நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிலையில் பாடசாலை சமூகத்தினருடன் பொலிஸார் இணைந்து இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் தீவிர சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலையின் கட்டங்கள் என்பன தீவிர சோதனையிடப்பட்டது.





