தமிழகத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இலங்கைத் தமிழர் கொடூர கொலை!!

276

இலங்கைத் தமிழர் கொடூர கொலை

தமிழகத்தில் இலங்கை தமிழரை 3 பேர் கொலை சேர்ந்து எரித்த வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பழையாற்றையொட்டியில் உள்ள மயானத்தில் தகனமேடையில் நேற்று முன்தினம் காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், இறந்தவர் பெயர் ரெசி (40) என்பதும் அவர் புகைப்படக்காரர் என்பதும் தெரியவந்தது. இலங்கை தமிழரான ரெசி கடந்த 5ம் திகதி மாலை கன்னியாகுமரி இலங்கை அகதிகள் முகாமில் உறவினர் கேத்தீஸ்வரன் (26) என்பவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது தான் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து பொலிசார் கேத்தீஸ்வரனை விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ரெசி பல ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோருடன் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்துள்ளார். புகைப்படக்காரரான ரெசி, திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கேத்தீஸ்வரனும் புகைப்படக்காரர் என்பதாலும், இருவரும் உறவினர்கள் என்பதாலும் ரெசி, கேத்தீஸ்வரன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது கேத்தீஸ்வரனின் உறவுக்கார பெண்ணுக்கும், ரெசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

ரெசியுடன் பழகிய பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் அவரை கேத்தீஸ்வரன் கண்டித்தார். ஆனாலும் ரெசி அந்த பெண்ணுடனான தொடர்பை விடவில்லை. இதையடுத்து ரெசியை கொல்ல முடிவு செய்த கேத்தீஸ்வரன் அவரை கன்னியாகுமரிக்கு வரவழைத்த நிலையில் இருவரும் காரில் அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது கேத்தீஸ்வரன் தான் வைத்திருந்த கத்தியால் ரெசியின் உடலில் சரமாரியாக குத்தியதாகவும், இதில் சம்பவ இடத்திலேயே ரெசி ரத்த வெள்ளத்தில் பிணமானதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கேத்தீஸ்வரன், தன்னுடைய நண்பர்களான பழனி (26), பைசல் (25) ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார்.

பின்னர் 3 பேரும் ரெசி உடலை சுடுகாட்டுக்கு கொண்டு வந்து தகனமேடை குழியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதையடுத்து பொலிசார் கேத்தீஸ்வரன் பழனி, முகமது பைசல் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.