வட்ஸ் அப்பிலேயே மூழ்கிய மனைவி : உரையாடல்களை பார்த்து அதிர்ந்து போன கணவன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

229

நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் மனைவியின் வட்ஸ் அப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் தனது மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் சொந்தமாக டெயிலர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 9 ஆம் வகுப்பு படிக்கிற வயதில் மகன் இருக்கும் நிலையில் அலமேலு வீட்டில் இருக்கும் நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் புதன்கிழமை அலமேலு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டுக்குள் அர்ஜுனனும், அவரது 13 வயது மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து தேனில் கலந்த சாணிப்பவுடர் மற்றும் அர்ஜுனன் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் போன்றவற்றை கைப்பற்றினர்.

முதலில் தனது மகனுக்கு சாணிப்பவுடரை தேனில் கலந்து சாப்பிடக்கொடுத்து விட்டு, உயிர் பிழைத்துக் கொள்ளக்கூடாது என்று இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர். மேலும் அந்த கடிதத்தில் எழுதியிருந்த வரிகள் தந்தை மகன் தற்கொலைக்காண காரணத்தை விவரிப்பதாக இருந்தது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்று வரும் மனைவி அலமேலுவுக்கு, வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்கள் இருந்ததாகவும் அதில் ஒரு ஆண் நண்பருடன் அலமேலு நீண்ட நேரம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்ததை கண்டு அர்ஜுனன் கண்டித்துள்ளார். ஆனால் அலமேலு கணவனின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று இரவு அலமேலு அந்த நபருடன் சாட்டிங்கில் ஈடுபட்ட வாட்ஸ் ஆப் பதிவுகளை வாசித்து பார்த்த அர்ஜூனன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தடம் மாறி பயணித்த தனது மனைவியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போல அந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் விரக்தி அடைந்து அர்ஜுனன் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.