சுமார் 45 லட்சம் பணம் மற்றும் பொருட் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்தறை வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் முன்னாள் இராணுவத்தினர் இருவரும் அடங்குவர்.
கொள்ளைக்காக பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் களுத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.





